குழந்தையுடன் கோவில் முன் பிச்சை எடுத்த காவலர்! எனக்கு வேற வழி தெரியல சாமி... பெரும் பரபரப்பு!
கரூரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் குழந்தையுடன் கோவில் முன் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. பொய் வழக்கு காரணமாகவே தவிப்பு என பிரபாகரன் கூறியதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காவல்துறை சம்பவங்கள் அடிக்கடி பேசுபொருளாகும் நிலையில், கரூரில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாமல் ஒரு காவலர் குழந்தையுடன் யாசகம் செய்வதைப் பார்த்த பொதுமக்கள் மனவேதனையில் ஆழ்ந்தனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரின் வேதனை
கரூர் பசுபதி பாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த பிரபாகரன், ஒரு பொய் வழக்கு காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டரை மாதங்களாக வருமானமின்றி கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்.
இதையும் படிங்க: "சிரிப்பா சிரிக்குது நிலைமை... " அரை நிர்வாண கோலத்தில் ஆபாச பேச்சு.!! போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்த காவல்துறை.!!
குழந்தையுடன் கோவில் முன் பிச்சை எடுத்த அதிர்ச்சி காட்சி
இன்று, பிரபாகரன் தனது சிறுவயது மகனை அழைத்துக் கொண்டு கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு வந்தார். வாழ்வாதாரமின்றி தவித்த அவர், கோவில் அருகே மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுக்க முயன்றார். இதைப் பார்த்த அருகிலிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது பிரபாகரன் காவல்துறையிடம் காலில் விழுந்து கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
“குடும்பத்தை காப்பாற்ற வழியில்லாமல்…”
பின்னர் குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்ட அவர், “பொய்யான ஒரு வழக்கால் சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். இரண்டு மாதமாக வருமானமில்லை. என் குடும்பம் பட்டினியால் தவிக்கிறது. அவர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் கோவில் முன் பிச்சை எடுத்தேன்” என்று கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைகள், மனிதநேயம் மற்றும் போலீஸ் பணியாளர்களின் நலன் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரபாகரனின் நிலைமைக்கு தகுந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.