×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிஎன்ஏ சோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!

Erode News: சிறுமி பலாத்கார புகாரில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Advertisement

கல்லூரியில் படித்து வந்த சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுந்தரம் என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!

வன்கொடுமை:

இந்நிலையில், இதே கிராமத்தில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவரின் மீது சிறுமி வன்கொடுமை தொடர்பான புகார் எழவே, ஆதாரம் இல்லாததால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. இதனிடையே, கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தது:

பின் யுவராஜ் மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு யுவராஜ் காரணம் என்பது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தையை பெற்றெடுத்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.

டி.என்.ஏ. சோதனை:

இதனையடுத்து, யுவராஜின் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: +2 மாணவி வன்கொடுமை.. தாயும், மகனும் அரங்கேற்றிய கொடூரம்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #sexual abuse #erode #17 year old girl raped
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story