தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திண்டுக்கல்: துடைப்பத்தால் அடித்து வரதட்சணை கொடுமை., காதல் திருமணம் செய்த 3 மாத கர்ப்பிணி தற்கொலை..!

திண்டுக்கல்: துடைப்பத்தால் அடித்து வரதட்சணை கொடுமை., காதல் திருமணம் செய்த 3 மாத கர்ப்பிணி தற்கொலை..!

in Dindigul Girl Suicide Case cops Investigation  Advertisement

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரின் மனைவி ஜெனிபர் (வயது 21). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். பெற்றோரை எதிர்த்து கல்லூரியில் படிக்கும்போது காதல் வயப்பட்டு, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களுக்கு பின் அவர் 3 மாத கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் ஜெனிபரின் தாய், சகோதரி அவ்வப்போது ஜெனிபருடன் பேசி உடல்நலத்தை கவனிக்க அறிவுறுத்தி வந்துள்ளனர். 

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் தற்கொலை.. கல்லூரி காதல் கசந்ததால் சோகம்.!

ஜெனிபர் மரணம்

ஜெனிபர் தனது சகோதரி சிந்துவுடன் அவ்வப்போது பேசி இருக்கிறார். இதனிடையே, சம்பவத்தன்று ஜெயபாலன் வீட்டில் இருந்து வந்த தகவலில், ஜெனிபர் தூக்கிட்டு உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, ஜெனிபரின் மரணம் உறுதியானது.

அதிர்ச்சி தகவல் அம்பலம்

மேலும், மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என போராட்டம் நடத்த, அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக வாக்குறுதி அளித்தனர். பின் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, ஜெனிபரின் சகோதரி சிந்து, சில தகவலை பகிர்ந்தார். 

Dindigul

நகை கேட்டு துன்புறுத்தல்

அதாவது, ஜெயபாலனின் தாய் சின்னம்மாள், ஜெனீபரை அவ்வப்போது வாக்குவாதம் செய்து சண்டையிட்டு இருக்கிறார். துடைப்பத்தால் தன்னை அடிப்பதாகவும், அதனை கணவர் வேடிக்கை பார்த்ததாகவும், தனக்கு ஆதரவாக அவர் பேசவில்லை என கூறி இருக்கிறார். எதற்கெடுத்தாலும் அழகில்லை, நிறமில்லை, பணமில்லை என சின்னம்மாள் அவதூறு பேசி இருக்கிறார். 

ஜெயபாலனின் தாய், தங்கை என குடும்பமே மகளை துன்புறுத்தி இருக்கிறது. மேலும், எனது மகளை 25 சவரன் நகை போட்டு கட்டிக்கொடுத்த நிலையில், நீ உனது வீட்டிற்கு சென்று 25 சவரன் நகை வாங்கி வா என கூறி இருக்கின்றனர். இதனால் மகளை கொலை செய்து தூக்கில் சடலமாக தொங்கவிட்டுள்ளனர் என ஜெனிபரின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். அவ்வப்போது ஜெயபாலன் போதையில் வந்தும் பிரச்சனை செய்துள்ளார். 

இதனால் ஜெயபாலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பகுதி நேர வருமானமாக கஞ்சா பயிரிட்டு விற்பனை: 18 வயது கல்லூரி மாணவர் கைது.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story