கண்டைனர் லாரி சக்கரத்தில் சிக்கி நேர்ந்த சோகம்; இளைஞர் தலை நசுங்கி மரணம்.!
கண்டைனர் லாரி சக்கரத்தில் சிக்கி நேர்ந்த சோகம்; இளைஞர் தலை நசுங்கி மரணம்.!

சென்னையில் உள்ள மாதவரம், ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், கண்டைனர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சோகம் நடந்துள்ளது.
இளைஞர் சாலையில் நடுப்புறம், இரண்டு வாகனங்களுக்கு நடுவே சென்றுகொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டு பகுதியில் மோதி இருக்கிறார்.
இதையும் படிங்க: நான் என்ன தீவிரவாதியா? டென்சனில் தமிழிசை., சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த பாஜக தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு.!
இளைஞர் தலை நசுங்கி பலி
இந்த விபத்தில் இளைஞர் சில அடி தூரம் இழுத்து வரப்பட்டு, லாரியின் சக்கரத்தில் சிக்கியவர் தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் மணலி நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் சிவா (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் திருவெற்றியூர் பகுதியில் வசித்து வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மாதவரம் ரவுண்டானா பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: ஆனந்த விகடன் இணையதள முடக்கம் விஷயத்தில் பச்சைக்கொடி காண்பித்த நீதிமன்றம்.. மத்திய அரசுக்கு உத்தரவு.!