×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'தண்டவாளத்துல விழுந்து சாகு'.. கணவரின் முதல் மனைவி மகளுக்கு சித்ரவதை.. பெண் கைது.!

கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை சித்ரவதை செய்த சித்தி கைது செய்யப்பட்டார்.

Advertisement

11 வயது சிறுமியை சித்ரவதைபடுத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

2 மகள்கள்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம், சீனிவாசராவ் வீதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரின் முதல் மனைவி குமுதா, பிரிந்து சென்றுவிட்டார். தம்பதிகளுக்கு 11, 7 வயதுடைய 2 மகள்கள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

சித்ரவதை:

முதல் மனைவியின் பிரிவுக்குப்பின், மணிகண்டன் கயல்விழி (வயது 25) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர் முதல் மனைவிக்கு பிறந்த சிறுமியை எப்போதும் சூடு வைப்பது, சுடுநீர் ஊற்றுவது என சித்ரவதை செய்து வந்துள்ளார்.

அதிகாரிகளுக்கு தகவல்:

மேலும், எப்போதும் நீ சென்று தண்டவாளத்தில் விழுந்து செத்துவிடு என கூறி வந்துள்ளார். சிறுமியின் வீட்டில் இருந்து அவ்வப்போது அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைகள் நலத்துறையின் 1098 க்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

சித்தி கைது:

இதனையடுத்து, குழந்தை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் அனைவரும் சென்று சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் கயல்விழி கைது செய்யப்பட்டார்.
 

இதையும் படிங்க: #JUSTIN: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. 'தீப்பெட்டி கேட்பதாக நடித்து துணிகரம்' காம கொடூரனுக்கு தர்ம அடி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #erode
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story