K.N.நேரு தொடர்புடைய இடங்களில் ‘ரெய்டு’.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை!
K.N.நேரு தொடர்புடைய இடங்களில் ‘ரெய்டு’.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை!
முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மொத்தம் சுமார் 10 இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.என். நேரு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற பணி நியமனங்களில் முறைகேடு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையின் விசாரணையும் முன்னதாக நடைபெற்றது.
இதையும் படிங்க: வெளிநாட்டு பெண்ணிடம் நிர்வாண பூஜை.. ரூ.90,000 மோசடி செய்த ஜோதிடர் கைது.!
அமலாக்கத்துறை விசாரணையின்போது கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் நேருவின் சகோதரர்கள் என். ரவிச்சந்திரன், கே.என். மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், வழக்கின் தொடர்ச்சியாக தற்போது நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள், பணம் அல்லது பிற முக்கியப் பொருட்கள் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்.
இதற்கிடையே, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. FIR பதிவு செய்யப்பட்ட பின்னர் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றமும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
தற்போது நடைபெறுவதாகக் கூறப்படும் சோதனையின் முழு விவரங்கள், அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போது, இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: Chennai: இணைபிரியா தோழிகள் விபத்தில் ஒருசேர பலியான சோகம்.. சாப்பிடச்சென்றபோது துயரம்..!