வேதனையின் உச்சம்! பெண்களை தொட்டால் மரணம்னு பயம் வரணும்! கோவை சிறுமி விவகாரத்தில் கதறி அழுது ஆவேசமாக பேசிய நபர்..... வைரலாகும் வீடியோ..!!!
கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் ஒருவர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகி வரும் நிலையில், ஒருவர் வேதனையுடனும் ஆவேசத்துடனும் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக X சமூக வலைதளத்தில் அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.
“கடுமையான தண்டனை என்ற பயம் வர வேண்டும்”
வைரலாகும் அந்த வீடியோவில் பேசிய நபர், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு சட்டத்தின் மீதான பயமின்மையே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். “நெருப்பு என்றால் சுடும் என்று எல்லோருக்கும் தெரியும். அதுபோல பெண் பிள்ளைகளை தவறான நோக்கத்தோடு தொடினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்” என்று அவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் சட்ட அமைப்புகள் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஐயோ.... வலிக்குது... தயவு செய்து விட்டுடுங்க! பயிற்சியில் கதறி துடித்த மாணவி.... கண்டுக்கொள்ளாத ஆசிரியர்.! வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!!
அரபு நாடுகளை எடுத்துக்காட்டாக கூறிய நபர்
அந்த உரையில், அரபு நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும், அதுபோன்ற சட்டங்கள் இந்தியாவில் ஏன் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “ஆட்சி மாறினாலும் காட்சி மட்டும் மாறவே மாட்டேங்குது” என்று அவர் வெளிப்படையாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தீவிர விவாதம்
இந்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டம் தேவை என கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் உடனடி நீதியும் விரைவு விசாரணையும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் பிரபலத்தை பார்த்தீங்களா.... டோக்கியோ உணவக ஊழியர் செய்த செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ....!!!