அழைக்கும் போதெல்லாம்... அறைக்கு சென்ற மாணவி! சொன்னதை செய்யலன்னா வீடியோவை லீக் பண்ணிடுவேன்... முன்னாள் வகுப்பறை நண்பனின் டார்ச்சல்! கதறித் துடித்து மாணவி எடுத்த விபரீத முடிவு...!!!
பெங்களூரைச் சேர்ந்த 22 வயது வாணி, முன்னாள் சக மாணவர் அபிஷேக்கின் தொடர் மிரட்டல் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக ஏரியில் குதித்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த 22 வயது வாணி, முன்னாள் சக மாணவர் அபிஷேக்கின் தொடர் மிரட்டல் மற்றும் பாலியல் தொந்தரவால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகரா ஏரியில் குதித்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மரணத்துக்கு அபிஷேக்கே காரணம் என அவர் எழுதிய கடிதம் தற்போது விசாரணையில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து தொடர் மிரட்டல்
கடந்த ஒரு ஆண்டாக வாணியை அபிஷேக் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் முன்பு சக மாணவர்களாக இருந்த நிலையில், வாணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துக்கொண்டு அவர் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பேச்சைக் கேட்காவிட்டால் அவற்றை இணையத்தில் வெளியிட்டு, குடும்பத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அபிஷேக் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டா பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்று போக்ஸோவில் சிக்கிய 19 வயது காதலன்.!
இதனால் வாணி நீண்ட காலமாக கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அபிஷேக் அழைக்கும் போதெல்லாம் அவரது அறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்ததாகவும் அவர் தனது கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை கடிதத்தில் அபிஷேக் மீது குற்றச்சாட்டு
தனது மரணத்துக்கு அபிஷேக்கே முழு காரணம் என வாணி எழுதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தொடர் பிளாக்மெயில் மற்றும் பாலியல் தொந்தரவு குறித்து கடிதத்தில் அவர் வேதனையுடன் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள அபிஷேக்கை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இருப்பிடம் மற்றும் வாணியுடன் தொடர்பில் இருந்த காலகட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரமாக நடைபெறும் விசாரணை
வாணியின் கடைசி கடிதம், அவரிடம் இருந்ததாக கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே மிரட்டல் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பான முழு பின்னணி தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ள அபிஷேக்கை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோ வழக்கில் சிக்கியும் திருந்தாத ஓட்டுநர்..!