×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"16 வயது சிறுவனை தாக்கிய 10 பேர்... " மருத்துவமனையில் பிரிந்த உயிர்.!!

16 வயது சிறுவனை தாக்கிய 10 பேர்... மருத்துவமனையில் பிரிந்த உயிர்.!!

Advertisement

கொளத்தூரை சேர்ந்த ஹர்ஷவரதன் என்ற 16 வயது சிறுவன் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 18ம் தேதி அவரது நண்பர் கௌதமை பக்கத்து ஏரியாவை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதை கேள்விப்பட்ட ஹர்ஷவர்தன், கௌதம் உட்பட சில நண்பர்களை அழைத்துக் கொண்டு தாதங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கும்பலிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கும்பல் ஹர்ஷவர்தன் மற்றும் அவரது நண்பர்களை தாக்க தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் மற்றவர்கள் தப்பியோடிய நிலையில் ஹர்ஷவரதன் மட்டும் மாட்டிக் கொண்டார். வசமாக சிக்கிக்கொண்ட அவரை 10 பேர் கொண்ட கும்பல் கட்டை போன்ற ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கியிருக்கிறது. இந்த சம்பவத்தினால் ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த ஹர்ஷவர்தனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஹர்ஷவர்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காக பதியப்பட்ட இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே அருண் மற்றும் 2 சிறார்கள் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையை தொடர்ந்து திருவள்ளூரை சேர்ந்த பிரான்சிஸ் லெவின் மற்றும் ரிஷிகாத் ஆகிய 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில சிறார்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: "கசந்தது காதல்..." கல்லைப் போட்டுக் கொன்ற மாமனார்.!! குமரியில் பயங்கரம்.!!

இதையும் படிங்க: "சரக்கடிக்க காசு குடுயா..." போதையில் எகிறிய மகன்.!! கல்லைப் போட்டு கதையை முடித்த தந்தை.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #chennai #Crime #Murder #16 Year Old Boy Mob Lynched
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story