×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்களுக்காக ஓடி வருவேன்னு சொன்னிங்க.... இப்போ எங்க போனீங்க CM விஜய்! 4 நாளா தலைமைச் செயலகம் பக்கமே வரல.... மேடையில் விளாசி எடுத்த ஆர்.பி. உதயகுமார்..!!!

தமிழகத்தில் அரிசி விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார். உற்பத்தி குறைவு, வெளிமாநில வரத்து பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அரசிடம் உடனடி நடவடிக்கை கோரியுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளதாக கூறிய அவர், நிலைமையை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரிசி விலை உயர்வால் மக்கள் பாதிப்பு

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், 26 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய உணவுப் பொருளையே அதிக விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியும் சமைத்து சாப்பிடும் தரத்தில் இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து வருவதாகவும் சாடினார்.

இதையும் படிங்க: விவசாயிகள் முதல் மாணவர்களின் வேலை வரை விஜய் வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதி!! முழு லிஸ்ட் இதோ.....!!!

முதல்வர் மீது விமர்சனம்

அரிசி விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், முதல்வர் விஜய் கடந்த 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்றும் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார். “மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வருவேன் என்று கூறிய முதல்வர், தற்போது அரிசி விலை உயர்வு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

விலை உயர்வுக்கு கூறப்பட்ட காரணங்கள்

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 91 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், 75 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது என அவர் தெரிவித்தார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததும், கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் வரத்து குறைந்ததும் டெல்டா மாவட்டங்களில் சாகுபடியை பாதித்துள்ளதாக கூறினார். அதோடு, கர்நாடகாவில் மழை குறைவால் அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் சன்னரக அரிசி வரத்தும் குறைந்துள்ளதாக விளக்கினார்.

நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக குற்றச்சாட்டு

அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதும் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார். உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு, வெளிமாநில வரத்துக் குறைவு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் ஆகியவை இணைந்து அரிசி விலையை தொடர்ந்து உயர்த்தியுள்ளதாகக் கூறிய அவர், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன்... மகன் மிதுனின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பை திட்டவட்டமாக அறிவித்த எடப்பாடி...! அதிரும் அரசியல் களம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#R P Udhayakumar #அரிசி விலை உயர்வு #tamil nadu #Rice Price #அதிமுக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story