ரிப்பன் வெட்டுதல் முதல் குத்துவிளக்கு ஏற்றுதல் வரை வெடித்த மோதல்! மேயர் பிரியா செய்த சதியால் தவெக பெண் எம்எல்ஏ பல்லவி குற்றச்சாட்டு...!!!
சென்னை பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் மேயர் பிரியா மற்றும் தவெக எம்.எல்.ஏ பல்லவி இடையே ஏற்பட்ட மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் மேயர் பிரியா மற்றும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ பல்லவி இடையே ஏற்பட்ட கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரிப்பன் வெட்டுதல் முதல் குத்துவிளக்கு ஏற்றுதல் வரை நடந்த நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளிக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ரிப்பன் வெட்டும் நிகழ்வில் இருவருக்கும் இடையே முன்னுரிமை தொடர்பான குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், இருவரும் தனித்தனியாக கத்திரிக்கோல் பயன்படுத்தி ரிப்பனை வெட்டினர்.
இதையும் படிங்க: தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வு.... இரவோடு இரவாக தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி! அடுக்கடுக்காக சரியும் அதிமுக! அதிர்ச்சியில் எடப்பாடி...!!!
குத்துவிளக்கு நிகழ்வில் ஏற்பட்ட சர்ச்சை
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின்போது, மேயருக்கு அடுத்ததாக விளக்கேற்ற எம்.எல்.ஏ பல்லவி முன்வந்தார். அப்போது மேயர் பிரியா, மெழுகுவர்த்தியை அவரிடம் வழங்காமல் அதிகாரிகளிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மற்றொரு நிகழ்வில் மேயர் மெழுகுவர்த்தியை நீட்டியபோது, அதை வாங்காமல் எம்.எல்.ஏ பல்லவி பின்வாங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின.
மேயர் பிரியாவின் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த மேயர் பிரியா, அரசு நெறிமுறைகளின்படியே குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். நடைமுறையின்படி முதலில் ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கேற்ற வேண்டும் என்றும், அதன் பின்னரே எம்.எல்.ஏவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதற்கு முன்பே பல்லவி கோபத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்லவியின் குற்றச்சாட்டு
மறுபுறம், பல்லவி தனது தரப்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், தன்னை அவமதிக்கும் வகையில் திட்டமிட்டு நடந்துகொள்ளப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். குத்துவிளக்கு ஏற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், தனக்குரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த மோதல் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் தங்களது விளக்கங்களை அளித்துள்ள நிலையில், நிகழ்வின் வீடியோக்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: பொது மேடையில் ஆபாச வார்த்தைகளை பேசிய திமுக நிர்வாகி! கேக்கவே காது கூசுது..... அதிர்ச்சி வீடியோ..!!!