தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வு.... இரவோடு இரவாக தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி! அடுக்கடுக்காக சரியும் அதிமுக! அதிர்ச்சியில் எடப்பாடி...!!!
அதிமுக நிர்வாகிகள் சிலர் அமைச்சர் N.ஆனந்தை சந்தித்து தவெகவில் இணைந்த சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் தவெக கட்சியில் இணைந்துள்ளனர். இந்த இணைவு நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாக வெளியான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்தை நேரில் சந்தித்த அதிமுக மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், மகளிரணி துணை செயலாளர் ஜெயதேவி உள்ளிட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆயிரம்விளக்கு நிர்வாகிகளும் இணைவு
இதனுடன், தென் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அரசியல் ரீதியாக இந்த இணைவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், அதிமுக மற்றும் தவெக வட்டாரங்களிலும் இது பேசுபொருளாக மாறியுள்ளது.
“தலைமைச் செயலகத்தில் அரசியல் நிகழ்வா?”
அதே நேரத்தில், அரசு நிர்வாக பணிகள் நடைபெறும் தலைமைச் செயலகம் போன்ற இடத்தில் அரசியல் கட்சி சேர்க்கை நிகழ்வுகள் நடத்தப்படுவது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பலர், அரசு அலுவலகங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் அரசின் நிர்வாக நெறிமுறைகளுக்கு எதிரானதா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் வட்டாரத்தில் விவாதம்
இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் இதை விமர்சிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த சர்ச்சை குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...கூட்டணி குறித்து தவெக தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சூடு பிடிக்கும் அரசியல் கலம்!!!