புதிய சட்ட சிக்கலில் சிக்கிய விஜய்! விஜய்க்கு செக் வைத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்! ஆளுநருக்கு அவசரமாக பறந்த பரபரப்பு கடிதம்..!!!!
தமிழகத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் இருக்கும் விஜய்க்கு புதிய சட்ட சிக்கல் உருவானது. பெரும்பான்மை நிரூபிக்காமல் பதவியேற்க கூடாது என ஆளுநருக்கு மனு.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது. ஆட்சியமைக்கும் முயற்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தற்போது புதிய சட்ட ரீதியான சிக்கல் எழுந்துள்ளது. பெரும்பான்மை நிரூபிக்கும் முன் அவரை முதலமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை ஆளுநரிடம் வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு அவசரக் கடிதம்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநருக்கு அவசர மனு அனுப்பியுள்ளார். அதில், விஜய் தலைமையிலான தவெக 118 உறுப்பினர்களின் ஆதரவை முறைப்படி நிரூபிக்கும் வரை, ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முரண்பட்ட தகவல்கள்..... அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!!!
மேலும், தெளிவான பெரும்பான்மை இல்லாத நிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது அரசியல் சாசன நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தவெக வட்டாரத்தில் பரபரப்பு
ஒருபுறம் ஆட்சியமைப்பதற்கான ஆதரவை திரட்டும் பணியில் தவெக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேநேரம், ஆளுநரை சந்திக்க விஜய் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் வந்துள்ள இந்த சட்டப்பூர்வ எதிர்ப்பு, ஆளுநர் எடுக்கும் அடுத்த முடிவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பிலும் இது தொடர்பாக ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டம் என்ன?
தற்போதைய சூழலில், ஆளுநர் தனிப்பெரும் கட்சியை அழைத்து பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிப்பாரா அல்லது கூடுதல் ஆதாரங்களை கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், விஜய்யின் அரசியல் பயணம் அடுத்த கட்டத்தை எட்டுமா அல்லது சட்ட ரீதியான சவால்களை சந்திக்குமா என்பது மீது கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: புதிய மாற்றம்.... நாளை காலை 11:30 மணிக்கு விஜய்க்கு பிரம்மாண்டாமாக நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா!!!