×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி... தனி அறைக்கு அழைத்து சென்று கதவை மூடி அநாகரிகமாக நடந்து கொண்ட அண்ணாமலை! அந்த வார்த்தையை சொல்லி மிரட்டல்... டெய்சி சரண் அடுக்கடுக்கான குற்றசாட்டு..!!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது டெய்சி சரண் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சிக்குள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தனி அறையில் மிரட்டியதாக குற்றச்சாட்டு

ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெய்சி சரண், அண்ணாமலை தன்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று கதவை மூடிய நிலையில் பேசினார் என்று கூறினார். அப்போது அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி, அதுவும் 'பிளடி' என்று கூறி கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: பதவி ஆசை எடப்பாடிக்கு பழினிச்சாமி கண்ணை பறித்துவிட்டது! உயிர் இருக்கும்வரை எதிர்ப்போம்.... சி.வி. சண்முகத்தின் அதிரடி சபதம்! சென்னையில் பரபரப்பு பேட்டி!!!

ஒரு பெண்ணாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலும் அழுத்தமும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். கட்சிக்குள் தனது கருத்துகளை வெளிப்படுத்தியதற்காகவே இத்தகைய அணுகுமுறையை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் கூறினார்.

திருச்சி சூர்யா விவகாரத்தை மீண்டும் எழுப்பிய டெய்சி சரண்

அண்ணாமலை மாநில தலைவராக இருந்த காலத்தில், திருச்சி சூர்யா தன்னை தொலைபேசியில் மிகவும் மோசமாகவும் ஆபாசமாகவும் பேசியதாக டெய்சி சரண் தெரிவித்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மாறாக, சம்பந்தப்பட்ட நபருக்கு ஆதரவு அளிக்கும் வகையிலேயே நடந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும், கேள்வி எழுப்புபவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் சாடினார்.

நிதி முறைகேடு குறித்த குற்றச்சாட்டு

அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான புகார்களைத் தாண்டி, அண்ணாமலை மீது நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் டெய்சி சரண் முன்வைத்தார். பல்வேறு தொழிலதிபர்களிடம் இருந்து மிரட்டல் மற்றும் முறைகேடான வழிகளில் பணம் பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அந்த நிதியின் மூலம் லண்டனில் சொத்துக்கள் வாங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படவில்லை.

தமிழக பாஜகவுக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், டெய்சி சரண் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து அண்ணாமலை தரப்பின் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: அண்ணாமலையின் வருகையோ, விலகலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது! கட்சிக்கு லாபமும் இல்லை.. நஷ்டமும் இல்லை! தமிழிசையின் காரசாரமான பேச்சு..!!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#annamalai #டெய்சி சரண் #BJP Tamil Nadu #Tamil Nadu Politics #Political Controversy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story