×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கூண்டோடு காலியாகும் அதிமுக! ஜெயலலிதா சமாதியில் கண்ணீருடன் குவிந்த ராஜினாமா கடிதங்கள்... அதிருப்தியால் அ.தி.மு.க.வில் நடக்கும் அதிர்ச்சி!!!

அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில், விழுப்புரத்தில் 1,160 நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து மதுரையிலும் நேரடி எதிர்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

அதிமுகவில் உள்கட்சி அதிருப்தி தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பொ. அர்ஜூனன் தலைமையில் 1,160 நிர்வாகிகள் கட்சிப் பதவிகளில் இருந்து ஒரே நேரத்தில் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேவேளை, சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக நேரடியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1,160 நிர்வாகிகள் ராஜினாமா

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் நிர்வாகிகள், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், தகுதியற்றவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: மொத்தமாக உடைந்த அதிமுக! எல்லாத்துக்கும் காரணம் எடப்பாடி தான்.... சி.வி.சண்முகம் தலைமையில் புதிய அணி! யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி திருப்பம்!!!

சி.வி. சண்முகம் அணியில் நீடிக்கும் அதிருப்தி

தகவலின்படி, தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தில் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது அணியைச் சேர்ந்த 17 மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் மாற்றப்பட்டன. பின்னர் மன்னிப்புக் கடிதம் அளிக்கப்பட்ட நிலையிலும், மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படாமல் மாநில நிர்வாகிப் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த சி.வி. சண்முகம் உள்ளிட்ட 9 முன்னாள் அமைச்சர்கள், புதிய பதவிகள் தேவையில்லை என்றும், சாதாரண தொண்டர்களாகவே தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் பழனிசாமிக்கு நேரடி எதிர்ப்பு

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் கருத்து கேட்டபோது, மதுரை பகுதிச் செயலாளர் கந்தன், கடந்த தேர்தலில் தோல்விக்கு தலைமை எடுத்த முடிவுகளே காரணம் என்றும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த AIADMK பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தேர்தலில் முழுமையாக பிரச்சாரம் செய்த நிலையில் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றும் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரத்தில் நிர்வாகிகள் ராஜினாமா செய்ததும், மதுரையில் தலைமைக்கு எதிராக வெளிப்படையாக கருத்துகள் முன்வைக்கப்பட்டதும் அதிமுகவின் உள்கட்சி நிலை குறித்து புதிய அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: சண்முகத்தின் ஆட்டத்தை ஒரே வார்த்தையில் அடக்கிய எடப்பாடி! அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட மூத்த புள்ளி.... பரபரப்பில் தமிழக அரசியல்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK #Edappadi Palaniswami #அதிமுக #cv Shanmugam #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story