×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: அதிமுக பொதுக்ககுழு கூட்டத்தில் இபிஎஸ்-க்கு வழங்கிய முழு அதிகாரம்! பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்! முழு லிஸ்ட் இதோ..!!!

சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி அதிகாரம் இபிஎஸுக்கு வழங்கப்பட்டு, திமுக அரசுக்கு எதிராக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

2026 சட்டசபை தேர்தலை மையமாகக் கொண்டு அதிமுக தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தும் வகையில், சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கட்சியின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

வானகரத்தில் தொடங்கிய அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் தொடங்கின. இதில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உடல்நலக் குறைவு காரணமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வர முடியாத நிலையில், கட்சியின் சட்ட விதிகளின்படி கே.பி. முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளு! இபிஎஸ் வந்ததும் மறுக்கப்பட்ட அனுமதி! சரமாரியாக மக்கள் சரிந்த காட்சி!

2026 தேர்தல் கூட்டணி அதிகாரம் இபிஎஸுக்கு

இந்த கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானதாக, 2026 சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கூட்டணி முடிவுகளையும் எடுக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. கூட்டணியில் யாரை சேர்ப்பது, யாருடன் இணைவது போன்ற அனைத்து முடிவுகளையும் இபிஎஸ் தனிப்பட்ட பொறுப்புடன் எடுக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான தீர்மானங்கள் தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தன. நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் மீட்பு, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறியதாகவும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு தேவையான முறையான தரவுகளுடன் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. "எல்லோருக்கும் எல்லாம்" என ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டம் ஒழுங்கு மற்றும் பிற முக்கிய தீர்மானங்கள்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் (SIR) வரவேற்கப்படுகிறது, 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்குவோம் என்ற சூளுரை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், டிஜிபி பதவியை கூட நிரப்ப முடியாத அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மொத்தத்தில், இந்த பொதுக்குழு கூட்டம் மூலம் 2026 தேர்தலை குறிவைத்து அதிமுக தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்ததுடன், எதிர்க்கட்சியாக திமுக அரசுக்கு எதிரான தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK General Council #Edappadi Palaniswami #2026 assembly election #DMK Government Criticism #Vanagaram Meeting
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story