உபி மாடல்.? "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.." மருமகனுடன் கம்பி நீட்டிய மாமியார்.!!
உபி மாடல்.? கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. மருமகனுடன் கம்பி நீட்டிய மாமியார்.!!

உபியில் மகளுக்கு நிச்சயித்த இளைஞருடன் மணப்பெண்ணின் தாயார் ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞருடன் நிச்சயதார்த்தம்
உத்திரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர்களது திருமணத்திற்கு 9 நாட்கள் மீதமிருந்த நிலையில் இளம் பெண்ணின் தாயார் தனது மகளுக்கு நிச்சயம் செய்த இளைஞருடன் ஷாப்பிங் செல்வதாக கூறி வெளியே சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
மருமகனுடன் கம்பி நீட்டிய மாமியார்
இது தொடர்பாக குடும்பத்தினர் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணின் தாயார் தனது வருங்கால மருமகனுடன் ஓடிச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு நிச்சயம் செய்வதற்கு முன்னரே இளம் பெண்ணின் தாயாரும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை மறைத்து தனது மகளுக்கு அந்த இளைஞருடன் நிச்சயதார்த்தத்தை செய்து வைத்திருக்கிறார். இந்த விவகாரம் அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!!
காவல்துறை விசாரணை
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இளம் பெண்ணின் தாயார் மற்றும் இளைஞர் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் நகையுடன் தலைமறைவாகி இருப்பது தெரியு வந்திருக்கிறது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் ஓடிச் சென்ற ஜோடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அனாதை இல்லத்தில் சேர மறுத்த மாமியார்-மாமனாரை சரமாரியாக தாக்கி கொடூரம் செய்த மருமகள்..!