கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!!
கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்... 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாய் தனது குழந்தைக்கு சூடு வைத்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக அந்த குழந்தையின் தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை பிரிந்த இளம் பெண்
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் வந்தனா. திருமணமான இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து அவரை பிரிந்த வந்தனா தனது மகளுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.
வாலிபருடன் கள்ளக்காதல்
இந்நிலையில் தனிமையில் வசித்த வந்தனாவிற்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர. இதற்கு வந்தனாவின் மகள் இடையூறாக இருந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: அனாதை இல்லத்தில் சேர மறுத்த மாமியார்-மாமனாரை சரமாரியாக தாக்கி கொடூரம் செய்த மருமகள்..!
தீயால் சூடு வைத்து வன்கொடுமை
தனது மகள் இருப்பதால் கள்ளக்காதலுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என எண்ணிய வந்தனா, தனது மகளை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். மேலும் சம்பவம் நடந்த தினத்தன்று தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை நெருப்பால் சூடு வைத்து கொடுமை செய்ததாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வந்தனா மற்றும் அவரது காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்; புதிய மாமியார் வைத்த ட்விஸ்ட்டால் ஷாக்.!