மனைவியை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கணவன்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!!
மனைவியை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கணவன்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!!

கணவன் - மனைவி சண்டையில் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கயிறால் கட்டி தலைகீழாக தொங்கவிட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேல் மாவட்டத்தில் வசித்து வரும் கணவர் தனது மனைவியை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கண்டங்களை குவித்து வருகிறது.
மனைவியை தொங்கவிட்ட கணவர் :
தம்பதிக்கு இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு நிகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியின் கால்களில் கயிற்றைக் கட்டி தலைகீழாக வீட்டு வாசல் முன் தொங்கவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பைக் டேங்கில் உட்கார்ந்து மாமாக்குட்டியுடன் லாங் டிரைவ்.. எல்லை மீறிய காதல் ஜோடியின் வீடியோ வைரல்.!!
பெண்மணி மருத்துவமனையில் அனுமதி :
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் பெண்ணின் கணவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவியும் கண்டனங்கள் :
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி கணவருக்கு எதிராக கண்டனத்தை குவித்து வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு கணவர் கைது செய்யப்பட வேண்டுமென போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரேநேரத்தில் 2 மனைவியுடன் குடித்தனம்.. அப்பா, தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக்கி பெருமிதம்.!!