×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோர்களே உங்க குழந்தைங்க விஷயத்தில் ரொம்ப கவனமா இருங்க! திடீர்னு துடிதுடித்து அழுது வாந்தி எடுத்த குழந்தை.... எக்ஸ்ரேவில் தெரிந்த பகீர் உண்மை.!!!

சூரத்தில் ஒன்றரை வயது குழந்தை விளையாடியபோது திறந்த ஊக்கை விழுங்கிய நிலையில், மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி மூலம் அதை வெற்றிகரமாக அகற்றினர்.

Advertisement

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் கிடந்த திறந்த ஊக்கை வாயில் வைத்து விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்தான் பகுதியில் நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு குழந்தை அழுததுடன் வாந்தியும் எடுத்தது. இதையடுத்து பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக சூரத் புதிய சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

எக்ஸ்ரேவில் சிக்கியிருந்த ஊக்கு

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்தனர். அதில், திறந்த நிலையில் இருந்த பாதுகாப்பு ஊக்கு உணவுக்குழாயின் மேல் பகுதியில் சிக்கியிருப்பது தெரியவந்தது. கூர்மையான ஊக்கு என்பதால் மேலும் தாமதித்தால் காயம் ஏற்படும் அபாயம் இருந்தது.

இதையும் படிங்க: 5 வயது சிறுமியின் வயிற்றில் சிக்கிய 50 கிராம் தங்கக் கட்டி! அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி.... ஆபத்தை தடுக்க மருத்துவர்கள் செய்த காரியம்! பகீர் சம்பவம்..!!!

எண்டோஸ்கோப்பி மூலம் அகற்றிய மருத்துவர்கள்

இதையடுத்து பெரிய அறுவைச் சிகிச்சை செய்யாமல், எண்டோஸ்கோப்பி எனப்படும் தொலைநோக்கி கருவி மற்றும் சிறப்பு மருத்துவக் கருவிகளின் உதவியுடன் ஊக்கை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் மருத்துவச் செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கு அகற்றப்பட்ட பின்னர் குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதுடன், உணவு மற்றும் தண்ணீரையும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அதிக செலவு ஏற்படக்கூடிய இந்த சிகிச்சை, சூரத் சிவில் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெற்றோருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

சிறு குழந்தைகள் விளையாடும்போது நாணயம், பேட்டரி, ஊசி, ஊக்கு உள்ளிட்ட சிறிய பொருட்களை வாயில் வைக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தை ஏதேனும் பொருளை விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால், வீட்டிலேயே அதை வெளியே எடுக்க முயற்சிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் குழந்தைக்கு ஏற்பட்ட ஆபத்து மேலும் தீவிரமடையாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: ஐயோ... பையன் எழுந்திருக்கவே மாட்டேங்குறான்! உடம்பெல்லாம் ஜில்லுன்னு இருக்கு! தாய் போட்ட பலே நாடகம்... விசாரணையில் அம்பலமான உண்மை! அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சூரத் குழந்தை #Safety Pin #Endoscopy #Surat Civil Hospital #குழந்தைகள் பாதுகாப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story