ஐயோ... ஆத்தி! சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவன்! உஸ்... உஸ்... கேட்ட சத்தம்...! சக்கரத்தில் காத்திருந்த அதிர்ச்சி! அலறி அடித்து ஓடிய மாணவன்.... ஷாக் வீடியோ!!!
உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவனின் மிதிவண்டிச் சக்கரத்தில் நல்ல பாம்பு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் போராடி பாம்பை மீட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம்போல் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, அதன் சக்கரத்தில் நல்ல பாம்பு ஒன்று சுற்றியிருப்பதை அவர் கவனித்தார். பயந்துபோன மாணவன் மிதிவண்டியை நடுவழியிலேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.
சக்கரத்தில் சிக்கிய பாம்பு
மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோதே சக்கரத்துக்குள் பாம்பு சிக்கியிருப்பதை மாணவன் பார்த்துள்ளார். எதிர்பாராத காட்சியால் பதற்றமடைந்த அவர், உடனடியாக மிதிவண்டியை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து விலகினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆண் உடலில் பெண் இனப்பெருக்க உறுப்புகள்.. டெல்லி மருத்துவர்களை அதிரவைத்த அரிய மருத்துவ சம்பவம்!
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்பு
மாணவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த கிராம மக்கள் திரண்டனர். சக்கரத்தில் இறுக்கமாகச் சிக்கியிருந்த பாம்பை வெளியே எடுப்பது அவர்களுக்கும் சவாலாக இருந்தது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, Snake Rescue செய்து பாம்பை பத்திரமாக வெளியே எடுத்தனர்.
பரவும் வீடியோ
மிதிவண்டிச் சக்கரத்தில் பாம்பு சிக்கியிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவன் எதிர்கொண்ட இந்த எதிர்பாராத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: 3 குழந்தைகளின் தாய்... 13 வயது இளைய இளைஞருடன் காதல்! வீட்டில் சிக்கியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!