×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 மாத கர்ப்பிணி மகளை ஆற்றில் தள்ளிவிட்டுக்கொன்ற தந்தை.. திடுக்கிடவைக்கும் காரணம்.. பதறவைக்கும் சோகம்.! 

கர்ப்பிணி மகளை தந்தை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

Advertisement

18 வயதில் காதலால் கர்ப்பமான மகளை தந்தை உறவினர்களின் அழுத்தத்தால் கொலை செய்தார். 

காதல் & கர்ப்பம்: 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 18 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவனை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், பெண்மணி 4 மாத கர்ப்பமாகி இருக்கிறார். 

இதையும் படிங்க: சொத்துக்காக மனைவி கொலை.. ஹாலிவுட் சீரிஸ் பார்த்து அரங்கேறிய சம்பவம்.. இறுதியில் ட்விஸ்ட்.! 

 உண்மை தெரியவந்தது.. 

இந்த விஷயம் குறித்து சிறுமியின் தந்தை உட்பட உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை கொலை செய்யும் எண்ணத்துடன் சிறுமியின் தந்தை உட்பட அவரின் 3 உறவினர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.

ஆற்றில் கொடூரம்: 

இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று 18 வயது இளம்பெண்ணை ஆற்றுக்கு அழைத்துச்சென்று கீழே குதிக்க வற்புறுத்தி இருக்கின்றனர். ஆனால், அவர் தற்கொலை செய்ய மறுப்பு தெரிவிக்கவே, தந்தை மகளை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். 

விசாரணை: 

பின் இவர்கள் மட்டும் திரும்பி வந்த நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. இதனையடுத்து, அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர். 
 

இதையும் படிங்க: 2 வருஷமா ஒரே டார்ச்சல்... 2 மாதமாக போட்ட பலே திட்டத்தால் தீட்டிய கத்தி! ஆசிரியை படுகொலையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Uttar pradesh #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story