×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சித்திரவதை தாங்க முடியல அம்மா... கடிதம் எழுதி வைத்துவிட்டு 11ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு! கடிதத்தில் எழுதி இருந்த அதிரவைக்கும் காரணம்..!

மத்திய பிரதேசத்தில் 11-ம் வகுப்பு மாணவி ஆசிரியர் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்தியாவில் பள்ளி மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெற்றோர்களையும் சமூகத்தையும் பதட்டமடையச் செய்து வருகிறது. மாணவர்களின் மனநிலை, பள்ளி சூழல், மற்றும் ஆசிரியர்களின் நடத்தை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

மத்திய பிரதேசத்தில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாணவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தையும் பயத்தையும் மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளது.

இதையும் படிங்க: 11 வயது மாணவிக்கு மூன்று நாட்களாக பயங்கர தலைவலி! ஸ்கேன் செய்து பார்த்ததில் நொறுங்கிருந்த... டீச்சர் தான் இதுக்கு காரணம்! அதிர்ச்சி சம்பவம்.!

மாணவி எழுதிய கடிதம்

தற்கொலை செய்ய முன், மாணவி தன் வேதனைகளை உருக்கமாக எழுதி வைத்துள்ளார். குறிப்பாக, பள்ளி டீச்சர் தன்னை தொடர்ந்து சித்திரவதை செய்ததாகவும், விரல்களுக்கு இடையில் பேனா வைத்து அழுத்தி பனிஷ்மென்ட் கொடுத்ததாகவும் கடிதத்தில் அவர் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

இந்தச் சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர். பள்ளி சூழல் மற்றும் ஆசிரியரின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் மனஅழுத்தத்திற்கு காரணமான அம்சங்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மன நலனைப் பற்றிய கவலைகளை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. பள்ளிகளில் மனிதநேயமான கல்வி சூழல் அவசியம் என்பதையும் இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.

 

இதையும் படிங்க: BREAKING: திடீரென இந்திய வீராங்கனை ரோகிணி கலாம் (35) தற்கொலை செய்து மரணம்! நாடே அதிர்ச்சியில்....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#student suicide #மத்திய பிரதேச #Teacher Harassment #school issue #tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story