மயக்க மருந்து போடும்போதே திடீரென பாய்ந்த சிறுத்தை! அடுத்த நொடி அதிகாரி செய்த அந்த காரியம்... திகில் வீடியோ!!!
கர்நாடகா தாவணகெரே அருகே கார் மோதி காயமடைந்த சிறுத்தையை மீட்கச் சென்ற வனத்துறை அதிகாரி மீது அது பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சிறுத்தை ஒன்று பலத்த காயமடைந்தது. நடக்க முடியாமல் சாலையில் தவித்த அதைக் கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்
காயமடைந்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்காக தேவையான உபகரணங்களுடன் வந்த அவர்கள், சிறுத்தையை கட்டுப்படுத்த மயக்க ஊசி செலுத்தினர்.
ஆனால் மருந்து முழுமையாக செயல்படுவதற்கு முன்பே வலி மற்றும் அச்சத்தில் சிறுத்தை திடீரென ஆக்ரோஷமடைந்தது. அங்கு நின்றிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர் மீது பாய்ந்த சிறுத்தை, அவரை கீழே தள்ளியது.
அதிகாரியை காப்பாற்றிய சக ஊழியர்கள்
இதைக் கண்ட மற்ற அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டனர். குச்சிகளால் சிறுத்தையின் கவனத்தை திசைதிருப்பி, ஆபத்தில் சிக்கிய அதிகாரியை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூண்டில் அடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
தாக்குதலுக்குப் பிறகும் மீட்புப் பணியை கைவிடாமல் வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இறுதியில் சிறுத்தையை பாதுகாப்பாக கூண்டில் அடைத்து, சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரி மீது சிறுத்தை பாய்ந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மனைவியை கொன்று தலையை பிரிட்ஜில் வைத்த கணவர்! கவுகாத்தியில் அதிர்ச்சி சம்பவம்!