"என் பொண்டாட்டி ஓடிப் போயிட்டா".. கண்டுபிடித்து தந்தால் சன்மானம்.. விரக்தியில் அறிவிப்பு வெளியிட்ட கணவன்.!
என் பொண்டாட்டி ஓடிப் போயிட்டா.. கண்டுபிடித்து தந்தால் சன்மானம்.. விரக்தியில் அறிவிப்பு வெளியிட்ட கணவன்.!

தந்தை உறவுமுறை கொண்ட ஒருவருடன் மனைவி ஓடிய நிலையில், தனது குழந்தைகளையும் அழைத்து சென்றதால் கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் என கணவர் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே ஜிதேந்திராவின் மனைவிக்கு தந்தை உறவுமுறை கொண்ட ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளகாதலால் ஓடிய மனைவி :
இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டை விட்டு கள்ளக்காதலனுடன் வெளியேறிய மனைவி, தன்னுடன் தனது குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!
மனைவியை கண்டுபிடித்தால் சன்மானம் :
இதனால் பதறிய கணவர் தனது மனைவியை கண்டறிந்து தரக்கோரி முதலில் காவல்நிலையத்தில் புகாரளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஜிதேந்திரா, தனது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டறிந்து தருவோருக்கு ரூ.20,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருமணமான ஒரே வாரத்தில் 3-வது மனைவி கொடூர கொலை.. கணவனின் அதிர்ச்சி செயல்.!!