×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காயம்பட்ட சிறுவனுக்கு பெபிக்குயிக் தடவி சிகிச்சை; செவிலியரின் அதிர்ச்சி செயல்.!

காயம்பட்ட சிறுவனுக்கு பெபிக்குயிக் தடவி சிகிச்சை; செவிலியரின் அதிர்ச்சி செயல்.!

Advertisement

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம், அடூர் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுவன் குருகிருஷ்ணா அன்னப்ப கோசமணி. சிறுவனுக்கு கடந்த ஜன.14 அன்று, விளையாடியபோது கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுவனை பெற்றோர் அடூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்த நிலையில், அங்கு சிகிச்சையில் இருந்த செவிலியர், சிறுவனுக்கு காயத்தில் பெவிக்குயிக் தடவி சிகிச்சை அளித்துள்ளார். 

இதையும் படிங்க: 5 வயது சிறுமி பலாத்காரம் முயற்சி.. சாக்லேட் வாங்கிக்கொடுப்பதாக அழைத்துச்சென்று அதிர்ச்சி.!

காயத்துக்கு பெவிக்குயிக்

மேலும், இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது, சிறுவனுக்கு முகத்தில் தையல் போட்டால், அது பின்னாளில் தழும்பாக தெரியும். அதனால் பெவிக்குயிக் கொண்டு சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், வேறொரு மருத்துவமனைக்கு மகனை அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்தனர். பின் இதுதொடர்பாக நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை தொடர்ந்து விஷயம் ஊடகங்களில் வெளியாகவே, அரசு துறை ரீதியான விசாரணை நடத்தி செவிலியரை பணியிடைநீக்கம் செய்தது. மேலும், சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தது.
 

இதையும் படிங்க: காய்கறி வியாபரிகள் பயணித்த லாரி விபத்தில் சிக்கி சோகம்; 9 பேர் பரிதாப பலி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Fevikwik #nurse #treatment #கர்நாடகா #செவிலியர் #சிகிச்சை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story