தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காய்கறி வியாபரிகள் பயணித்த லாரி விபத்தில் சிக்கி சோகம்; 9 பேர் பரிதாப பலி.!

காய்கறி வியாபரிகள் பயணித்த லாரி விபத்தில் சிக்கி சோகம்; 9 பேர் பரிதாப பலி.!

in Karnataka Uttara Kannada lorry Accident 9 Died  Advertisement

 

வியாபாரத்திற்காக சந்தைக்கு பயணித்த நபர்களின் லாரி விபத்தில் சிக்கி 9 பேர் இன்று அதிகாலை பலியான சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திர கன்னடா மாவட்டம், யல்லபுரா, குல்லாபுரா பகுதியில், தேசிய நெடுஞ்சாலை எண் 63ல் இன்று லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இதையும் படிங்க: குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், குளிரில் விரைத்து உயிரிழந்த தந்தை; மருத்துவமனை வளாகத்தில் சோகம்.!

இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 9 பேர் நிகழ்விடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.

லாரி விபத்து

விபத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற வாகன ஓட்டிகள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

karnataka

விசாரணையில், உத்திரகன்னட மாவட்டம், சாவனூரில் இருந்து குமுதா நோக்கி லாரி பயணம் செய்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் காய்கறி வியாபாரிகள் ஆவார்கள். 

கட்டுப்பாட்டை இழந்தது

குமுதா சந்தே என்பவருக்கு சொந்தமான லாரியில், சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்றுகொண்டு இருந்த வியாபாரிகள், வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பலியானது தெரியவந்தது. லாரியில் மொத்தமாக 28 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர். 

இதுதொடர்பாக எல்லாபூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி களநிலவரங்கள் காத்திருக்கிறது.

இதையும் படிங்க: பசுவின் மடியை அறுத்த நபர்; போதையில் அரங்கேறிய பயங்கரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Uttara Kannada #Lorry #accident #கர்நாடகா #உத்திர கன்னடா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story