ஐயோ... யாரவது வாங்க! தூக்கில் தொங்கிய தந்தை... அலறிய மனைவி! செல்போனில் வீடியோ எடுத்த குழந்தை...! அதிர்ச்சி சம்பவம்!!!
ஹரியானாவின் குருகிராமில் பன்னாட்டு நிறுவன ஊழியர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 36 வயதான ஒருவர், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இந்த முடிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், குருகிராம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சூரத் நகர் வீட்டில் சோக முடிவு
குருகிராமின் சூரத் நகர் பகுதியில் வசித்து வந்த அந்த நபர், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின்படி, தம்பதியிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மற்றும் குடும்பப் பிரச்சினைகளே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் கைபேசியில் பதிவான காட்சிகள்
விசாரணையின் போது, தந்தை தூக்கில் தொங்கியிருந்த காட்சியை அவரது குழந்தை கைபேசியில் வீடியோவாக பதிவு செய்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில், தாயார் கதறி அழுது உதவிக்காகக் கூச்சலிடும் சத்தமும் பதிவாகியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை விசாரணை தீவிரம்
உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன, குடும்பப் பிரச்சினை மட்டுமே பின்னணியா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதையும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். குடும்பத்தினரின் வாக்குமூலம், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் கைபேசியில் பதிவான வீடியோ உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கல்யாணம் ஆன வெறும் 20 நாளில் மனைவி செய்த அந்த ஒரு காரியம்! மனைவியின் லீலைகளை நடுத்தெருவில் பார்த்து அதிர்ந்துப்போன கணவன்!. வைரலாகும் வீடியோ..!!!