அய்யோ... கடவுளே! பஞ்சரான ஜேசிபி டயருக்கு காத்தடிக்கும்போது பயங்கரமாக வெடித்து சிதறிய டயர்.... காற்றில் தூக்கி வீசப்பட்டு 2 பேர் துடிதுடித்து பலி! பகீர் வீடியோ...!!!
சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஜேசிபி டயருக்கு காற்று நிரப்பியபோது ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போத்ரி பகுதியில் கட்டுமானப் பணியின் போது நிகழ்ந்த ஜேசிபி டயர் வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டயருக்கு காற்று நிரப்பும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நால்வர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காற்று நிரப்பியபோது திடீர் வெடிப்பு
கடந்த ஜூன் 18-ஆம் தேதி போத்ரியில் உள்ள பார்ச்சூன் எலிமெண்ட்ஸ் கட்டுமான குடியிருப்பு வளாகத்தில் பஞ்சரான ஜேசிபி டயரை சரிசெய்யும் பணி நடைபெற்றது. அப்போது டயருக்கு காற்று நிரப்பிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதிக அழுத்தம் காரணமாக டயர் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், டயரின் மீது அமர்ந்திருந்த தொழிலாளர்கள் 10 முதல் 15 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜேசிபி உதவியாளர் சிவம் சாஹு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: நிமிஷத்துல இப்படியா நடக்கணும்! கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பறந்து போன பைக்குகள்! திக் திக் விபத்து வீடியோ!!!
மருத்துவமனையிலும் உயிர் பிழைக்கவில்லை
படுகாயமடைந்த மற்றொரு உதவியாளரான உமாகாந்த் கௌஷிக் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
அதே நேரத்தில் ஜேசிபி ஆபரேட்டர் ராகுல் யாதவ், மெக்கானிக் அஜய் நிஷாத் உள்ளிட்ட மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரலாகும் CCTV காட்சிகள்
வெடிப்பு ஏற்பட்ட வேகத்தில் டயரின் இரும்பு டிஸ்க் சுமார் 30 முதல் 40 அடி தூரம் வரை பறந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த CCTV காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. டயர் வெடிப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பலத்த சூறாவளி காற்று! தகரக் கொட்டகையை பிடிக்க முயன்ற இளைஞர்..... காற்றில் பறந்த அதிர்ச்சி வீடியோ! 74 பேர் பலி....மீட்பு பணிகள் தீவிரம்!!!