×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிக்கடி வீட்டுக்கு வந்த இளைஞர்! கணவரிடம் மனைவி சொன்ன பொய்! அதோடு நிக்கல... அம்மா வீட்டுக்கு போய் மனைவி செய்த அந்த ஒரு காரியம்.! அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

மனைவியின் திருமணத்திற்கு மீறிய உறவு குறித்த தகவலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மனைவியின் திருமணத்திற்கு மீறிய உறவு தொடர்பான தகவல்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு ஜெய்ப்பூரில் புதிய வாழ்க்கை

முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான அபய் குமார், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திவிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குழந்தை இழப்பினால் குறையாத துக்கம்! விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஜெய்ப்பூரில் வாடகை வீட்டில் குடியேறி தங்களது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் சுமுகமாக இருந்த வாழ்க்கையில் பின்னர் பிரச்சினைகள் உருவாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்தை ஏற்படுத்திய நெருக்கம்

தகவலின்படி, திவிஷாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபரை தனது உறவினர் என அபய் குமாரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

நாட்கள் செல்லச் செல்ல இருவரின் பழக்கம் குறித்து அபய் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மனைவியின் நடவடிக்கைகளை அவர் கவனித்து வந்ததாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப் தகவலால் அதிர்ச்சி

இதற்கிடையில், திவிஷா தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அபய் குமாரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றைப் பார்த்த அவர் கடுமையான மன உளைச்சல் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான பீகாருக்கு திரும்பிய அபய் குமார், சில நாட்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், ரயில் முன் பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை கடிதம் கைப்பற்றிய போலீசார்

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அபய் குமாரின் அறையில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் தனது மனைவியின் கள்ள உறவு காரணமாக கடும் மனவேதனையில் இருந்ததாகவும், தனது மரணத்திற்கு அவளே காரணம் என்றும் எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் முழு பின்னணி குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar News #கள்ள உறவு #Suicide case #Jaipur #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story