×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அண்ணாந்து தண்ணீர் குடித்தால் இவ்வுளவு பிரச்சனைகள் ஏற்படுமா? மக்களே கவனம்..!

அண்ணாந்து தண்ணீர் குடித்தால் இவ்வுளவு பிரச்சனைகள் ஏற்படுமா? மக்களே கவனம்..!

Advertisement

வீட்டில் நாம் இருக்கையில் பெரும்பாலும் நீரை வாய் வைத்து, கட்டில் அல்லது தரையில் அமர்ந்து குடித்திருப்போம். ஆனால், சிலர் வாயை வைத்து தண்ணீர் குடித்தால் கண்டிப்பார்கள். பணியிட சூழல் மற்றும் பிற காரணங்களுக்காக நீரினை நாம் நின்றுகொண்டே குடிப்போம். 

நம்முடன் இருந்த தாத்தா, பாட்டி ஆகியோர் அதற்கான காரணத்தை நம்மிடையே தெளிவுபடுத்தவில்லை. நாமும் அவர்களின் பால் இருந்த நம்பிக்கையில், அதன் விபரத்தை கேட்டறியாமல் இருந்துவிட்டோம். இன்றளவில் உள்ள சிறுவர்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதால், கேள்விகளை எழுப்புகின்றனர். 

அந்த வகையில், நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் தெரிந்து விழும். இதனால் வயிற்றில் வேகமாக செல்லும் நீர், உடலின் உறுப்புகளில் தாக்கத்தை உண்டாக்கும். குடல் மற்றும் செரிமான இயக்கத்தை பாதிக்கும். சிறுநீரகத்தின் வடிகட்டுதல் தன்மை பாதிக்கும். உடலின் நீர் சமநிலை பாதிக்கப்படும். 

தண்ணீரை வாய் வைத்து மெல்ல குடிப்பதே நல்லது என்று ஆயுர்வேத முறை கூறுகின்றன. அண்ணாக்க ஆ போட்டு தண்ணீரை மடமடவென குடித்தால் தைராய்டு பாதிப்பு கூட ஏற்படலாம். வெளியே செல்லும் இடங்களில் நீரை அண்ணாந்து குடித்தாலும், வீட்டில் இயல்பாக குடிப்பது நல்லது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#water #drinking #Lifestyle #Health #health tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story