ஜவ்வரிசியில் உள்ள அசத்தல் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?.. விபரம் இதோ..!
ஜவ்வரிசியில் உள்ள அசத்தல் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?.. விபரம் இதோ..!

மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனம் இல்லாத உணவுப்பொருள் ஆகும். இது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். உடனடி செரிமான ஆற்றலை வழங்கும். உடலை குளிர்ச்சியாக்கும். பித்தம் அளவுக்கு அதிகமாக இருப்பவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி நல்லது.
இதில் அதிகளவு கார்போஹைட்ரேட், குறைந்தளவு கொழுப்பு உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு நல்லது. ஜவ்வரிசியில் காணப்படும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இரத்த நாளத்தை சீர்படுத்தி, இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடுகள் தடையின்றி இயங்கும். உடலில் இருக்கும் சேதமான செல்கள், திசுக்களை சரிசெய்யும். மலச்சிக்கலை நீக்கும்.
கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். மூட்டுவலி பிரச்சனையை குறைக்கும். விரதத்திற்கு பின்னும், உடற்பயிற்சிக்கும் பின்னும் ஜவ்வரிசி சாப்பிட்டால் நல்லது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குவதால் உடற்சோர்வு, தலைசுற்றல், தலைவலி பிரச்சனையை சரிசெய்யும்.