×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மோர் குடிப்பதால் இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுமா.? மருத்துவர்கள் அறிவுரை.!

மோர் குடிப்பதால் இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுமா.? மருத்துவர்கள் அறிவுரை.!

Advertisement

கோடை காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் பானங்களில் ஒன்று மோர். பெரும்பாலானவர்கள் செயற்கை குளிர்பானங்களுக்கு பதிலாக கோடை சூட்டை தணிப்பதற்கு ஊர் அருந்துவார்கள். மோர் நமது உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது.

மோரில் புரதச்சத்து நார்ச்சத்து வைட்டமின் பி12 சோடியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது கோடை காலத்தில் நமது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பை சரி செய்வதோடு பற்கள் மற்றும் எலும்புகளுக்கு தேவையான வலிமையையும் வழங்குகிறது. இத்தனை நன்மைகள் மோரில் இருந்தாலும் இவை நம் உடலுக்கு பக்க விளைவுகளை சில நேரங்கள் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மோர் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான உப்பு சத்து சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மோரில் சோடியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக மோரானது வெண்ணையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. வெண்ணையில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். வெண்ணையில் இருந்து மோர் பிரித்தெடுக்கப்படும் போது அவற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவை குழந்தைகளுக்கு சளி மற்றும் தொற்றுக்களை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் சளி காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்களும் மோர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Butter milk #Healthy life #Health benefits #Side effects #health tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story