×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரண்டையின் அற்புத நன்மைகள்.!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரண்டையின் அற்புத நன்மைகள்.!

Advertisement

நாட்டு மருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகையாகவும், உணவாகவும் பயன்படுவது பிரண்டை. இது சாதாரண கிராமப்புற காடுகளில் கிடைக்கும் செடி வகையாகும்.

இந்த பிரண்டை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன்படி பிரண்டையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

இளம் பிரண்டையை துண்டு துண்டாக நறுக்கி நெய்யில் வதக்கி, அரைத்து தினமும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். மேலும் அடிபட்டு ஏற்படும் வீக்கத்தில் பிரண்டையை அரைத்து தடவியினால் வீக்கம் குறையும்.

பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பிரண்டையை நெய் விட்டு வதக்கி, அரைத்து சாப்பிட்டு வர பெருங்குடல் புண் குணமாகும்.

குறிப்பாக ஆண்கள் பிரண்டை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சியை போக்கி, ஆண்மையை பெருக்குகிறது. மேலும் பிரண்டை துவையல் சாப்பிடுவதால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கலை சரி செய்கிறது.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கால வலியை குறைக்க, பிரண்டை சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Food tips #Lifestyle #pirandai #Benefits of pirandai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story