இனி.. கதை வேறலெவல் தான்... சிங்கப்பெண்ணே சீரியலில் புதிதாக நடிக்க களமிரங்கும் நடிகை! யார்னு பாருங்க...
இனி.. கதை வேறலெவல் தான்... சிங்கப்பெண்ணே சீரியலில் புதிதாக நடிக்க களமிரங்கும் நடிகை! யார்னு பாருங்க...

சன் டிவியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே. இந்த சீரியல் தற்போது மிக முக்கியமான கட்டத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள இந்த கதையில், தற்போது ஆனந்தியின் கர்ப்பம் தொடர்பான விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்தியின் பிரச்சனை அதிகரிக்கிறது
ஆனந்தி, தன் கர்ப்பம் குறித்து யாரிடமும் பேச முடியாமல் தவிக்கிறார். மேலும், அன்புவை திருமணம் செய்யவும் அவளால் முடிவெடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பல்வேறு மனவேதனைகளை எதிர்கொண்டு வருகிறார்.
சீரியலில் நடிக்கவுள்ள புதிய நடிகை
இந்நிலையில், சிங்கப்பெண்ணே தொடரில் ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகமாகியுள்ளது. துளசி என்ற வேடத்தில், பூஜிதா என்ற நடிகை தற்போது நடிக்க துவங்கியிருக்கிறார். இந்த புதிய நுழைவு கதையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனியாவை தொடர்ந்து திருமணத்திற்கு ரெடியாகும் ராதிகா மகள்! மணக்கோலத்தில் வெளியான காணொளி இணையத்தில் வைரல்....
இதையும் படிங்க: தவறான வீடியோ பரவல்! சைபர் க்ரைமில் புகார் அளித்த ஜெமினி பட நடிகை கிரண் ரத்தோட்!