ஓராண்டிலே குடும்பத்தில் இரண்டு மீளா துயரம்... இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்த மகள்! கண்கலங்க வைக்கும் காட்சி..!!!
இயக்குநர் பாரதிராஜாவின் உடல் இன்று தேனி மாவட்டத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு நடைபெற்றது.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் இன்று சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. உறவினர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தேனியில் பொதுமக்கள் அஞ்சலி
மகன் மனோஜின் மறைவுக்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இன்று காலை அவரது உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதும், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தேவதானப்பட்டி அருகே உள்ள அவரது தோட்டத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: BREAKING: தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்! அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
முன்னதாக அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 72 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.
மகள் ஜனனி இறுதிச் சடங்கு செய்தார்
இறுதிச் சடங்குகள் அனைத்தையும் அவரது மகள் ஜனனி முறைப்படி மேற்கொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் நடைபெற்றது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக 48 வயதிலேயே உயிரிழந்திருந்தார். அந்த இழப்பிலிருந்து மீளாமல் இருந்த பாரதிராஜாவின் மறைவு, அவரது குடும்பத்தினரையும் தமிழ் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.