உணவை குறைவாக உண்ணுங்கள்... வடகொரியா அதிபர் கூறியதால் சர்ச்சை..!!

உணவை குறைவாக உண்ணுங்கள்... வடகொரியா அதிபர் கூறியதால் சர்ச்சை..!!


vadakoriya

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  வட கொரியா அரசு, தனது நாடான  வெளிநாட்டு எல்லைகளுக்கு இடையே சீல் வைத்துள்ளது. இதனால்  உணவுப் பொருட்கள், எரிபொருள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளது.

இதனால் வட கொரியா பியாங் யாங் நகரில் மக்கள் உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் மக்களிடம் கூறியதாவது, 2025ம் ஆண்டு வரை நம் நாட்டு மக்கள் உண்ணும் உணவை குறைவாக உண்ண வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே கொரனோவிடமிருந்து தங்களை பாதுகாத்து உணவு பஞ்சத்தை போக்க முடியும் என்றார். வட கொரியா அதிபர் கூறியதை எதிர்த்து உலக நாடுகளில் உள்ள அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஐ.நா.வின் உணவுக் கழகம் தெரிவித்ததாவது, எல்லைக்கு சீல் வைத்த நிலை தொடர்ந்து நீடித்தால்  வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தலைவிரித்தாடும் என தெரிவித்துள்ளது.