பதற்றமான சூழலில் டிரம்ப் பதிவிட்ட அந்த ட்வீட்! கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்!
பதற்றமான சூழலில் டிரம்ப் பதிவிட்ட அந்த ட்வீட்! கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்!
அண்மையில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்கியுள்ளது. மேலும் ஈரானில் உள்ள அமெரிக்க விமான படைத்தளங்கள் மீது 12 ஏவுகணைகளை கொண்டு அதிரடியாக தாக்கியது ஈரான் ராணுவம்.
மேலும் இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இதற்கு தகுந்த பதிலடியை அமெரிக்கா கொடுக்கும் என்பது மட்டும் உறுதி.
இந்நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் பதிவிட்ட பதிவை பார்த்து அமெரிக்க மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். அதில் டிரம்ப் ஆல் இஸ் வெல் என்று பதிவிட்டுள்ளார். பதற்றமாக இருக்கும் இந்த சூழலில் டிரம்ப் பதிவிட்ட இந்த பதிவால் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும் போரில் எவ்வளவு சேதம் நடந்தது, எத்தனை பேர் பலியானார்கள் என்று கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
மேலும் இதுவரை எந்த பிரச்சனையுமில்லை. உலகிலேயே நம்மிடம் மிகவும் சக்தி வாய்ந்த, அதிக பலம் வாய்ந்த ராணுவம் இருக்கிறது. நாளை காலை நான் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன், என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
All is well! Missiles launched from Iran at two military bases located in Iraq. Assessment of casualties & damages taking place now. So far, so good! We have the most powerful and well equipped military anywhere in the world, by far! I will be making a statement tomorrow morning.
— Donald J. Trump (@realDonaldTrump) January 8, 2020