வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதி: குழந்தையை பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதி: குழந்தையை பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி.


parents-refused-born-baby

அமெரிக்காவில் பல ஆயிரம் செல்வது செய்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை பார்த்துவிட்டு  தங்களுக்கு அந்த குழந்தை வேண்டாம் என கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட தம்பதிக்கு மூன்று முறை கருசிதைவது ஏற்பட்டதாலும், கருப்பையில் நீர் கட்டிகள் இருந்ததால் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. இதனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர்கள் ஒரு மருத்துவமனையை அணுகியுள்னனர். அங்கு கணவனின் விந்தணுவை மனைவியின் கருமுட்டையுடன் சேர்த்து வளர்த்து ஒரு வாடகை தாய் வயிற்றில் வைத்துள்ளனர்.

World news

இதற்காக பல லட்சம் அவர்கள் செலவு செய்த நிலையில் 10 மாதம் கழித்து குழந்தை பிறந்தது. ஆசையுடன் தங்கள் குழந்தையை பார்க்க சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், பிறந்த குழந்தை தலையில் கருகருவென முடியுடனும், பழுப்பு நிற கண்களுடனுமான ஆசியா குழந்தை பிறந்துள்ளது.

ஏதோ தவறு நடந்துள்ளதை அறிந்த அவர்கள் பிறந்த குழந்தையின் DNA வை சோதனை செய்ததில் அந்த குழந்தை இவர்கள் குழந்தை இல்லை என முடிவு வந்துள்ளது. மருத்துவமனையின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த குழந்தையை யார் வளர்ப்பது என்பது குறித்து விவாதம் நடைபெற்றுவருகிறது.