OMG.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

OMG.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!



OMG.. Powerful Earthquake... Tsunami Alert for Coastal Areas..!

பசிபிக் தீவு நாடான வானூட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது போர்டு- ஓர்லி கிராமத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் மேலும் ரிக்டர் அளவுகோலில் 7.0 பதிவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பூமிக்கு அடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிபயங்கரமாக குலுங்கியதாகவும், இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் பலியோ, சேதமோ ஏற்படவில்லை என்றும், அப்பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.