காதலியை உயிருடன் அடுப்பில் வைத்து எரித்த காதலன்..! துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்.! திகில் சம்பவம்.!
காதலியை உயிருடன் அடுப்பில் வைத்து எரித்த காதலன்..! துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்.! திகில் சம்பவம்.!
அர்ஜென்டினா நாட்டில் வசித்து வருபவர் நைம் வேரா. 25 வயது நிறைந்த இவரது காதலி மைக்கேலா ப்ரெண்டா மைக்கேலா கோர்டிலோ. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டை வெடித்துள்ளது. இந்நிலையில் வாங்குவதை கைகலகலப்பாக மாறிய நிலையில் நைம் ஆத்திரத்தில் காதலி ப்ரெண்டாவை படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளான்.
காதலி படிக்கட்டில் இருந்து கீழே உருண்டு விழுந்த நிலையில் மூச்சுபேச்சின்றி மயக்கநிலையில் கிடந்துள்ளார்.இந்நிலையில் அவரது காதலி உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா? என்று நைம் மிகவும் பயந்துள்ளார்.
மேலும் தனது காதலி இறந்திருந்தால் கொலை வழக்கில் சிக்கிக்கொள்வோம் என்று பயந்து, அவர் இறந்துவிட்டாரா? என்று கூட தெரியாமல் ப்ரெண்டாவை போர்வையில் சுற்றி, கேக் வேகவைக்கும் பெரிய கிரில் அடுப்பில் வைத்து எரித்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு, பல வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் கவரில் உள்ள உடல் பாகங்கள் போலீசாருக்கு கிடைக்கவந்த நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுளனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், மைக்கேலா ப்ரெண்டா உயிருடன் மயக்க நிலையில் இருக்கும் போதே எரிக்கப்பட்டதும், மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரது காதலனான நைமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.