பாவம்: ஆண்கள் மீதுள்ள விரக்தியால் திருமணத்திற்கு ஒரு நாயை தேர்வு செய்த மாடல் அழகி!
பாவம்: ஆண்கள் மீதுள்ள விரக்தியால் திருமணத்திற்கு ஒரு நாயை தேர்வு செய்த மாடல் அழகி!
நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதாலும், ஆண்கள் மீதான நம்பிக்கையை இழந்ததாலும் இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தான் வளர்ந்துவரும் லோகன் என்ற நாயை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
49 வயதாகும் எலிசபெத் என்னும் இந்த மாடல் அழகி பல ஆண்களால் ஏமாற்றப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு டேட்டிங் இணையதளம் மூலம் 220 ஆண்களை சந்தித்த இவருக்கு எந்த நபரையும் பிடிக்கவில்லையாம். இதனால் விரக்திக்கு சென்ற இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 , 2018 அன்று ஒரு நாயை தத்தெடுத்துள்ளார்.
அதற்கு லோகன் என பெயரிட்டுள்ளார். தான் தனிமையில் இருக்கும்போது, சோகத்தில் இருக்கும்போது லோகன்தான் தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும், அவன் என்னை ஏமாற்றமாட்டான், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துளோம்.
எனவே இந்த வருடம் ஆகஸ்ட் 2 , 2019 நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அந்த மாடல் அழகி தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.