சீனாவில் மீண்டும் படையெடுக்கிறதா கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு!

சீனாவில் மீண்டும் படையெடுக்கிறதா கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு!


Covid spreads again in china

சீனாவில் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் மேல் அதிகரித்துள்ளது.

கடந்த 2019 ஆம் டிசம்பர் மாதத்தில் முதல்முறையாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. சீனாவில் பல உயிர்களை பலி வாங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைக்கிறது.

china

சீனாவில் முதலில் பரவ துவங்கினாலும் கடந்த மார்ச் மாத துவக்கத்திற்கு பிறகு பெரிய அளவில் எந்தவித பாதிப்புகளும் பதிவாகவில்லை. ஆனால் தற்போது நேற்று ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது கடந்த நான்கு மாதங்களில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். இதனால் சீனாவில் மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச துவங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.