சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு.!
சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு.!
சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் உள்ள குயின்காங் மாகாணத்தின் டெலிங்கா நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியது.
பூமிக்கடியில் சுமார் 8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் சில நிமிடங்கள் வரை பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பெரிதளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த 12 ஆம் தேதி குயின்காய் மாகாணத்தின் மென்யுவான் கவுண்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.