பப்ஜி விளையாட பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கி தராததால்... சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..!

பப்ஜி விளையாட பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கி தராததால்... சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..!


boy-commits-suicide-by-shooting-himself-as-his-parents

பாகிஸ்தானில், வீடியோ கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர மறுத்ததால், துப்பாக்கியால் சுட்டு கொண்டு சிறுவன் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்.

பாகிஸ்தானில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லாகூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அலி ஜாயின் என்ற சிறுவன் அவனது தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான்.

பப்ஜி விளையாட்டில் தொடர்ந்து தோல்வி அடைந்ததில் சிறுவன் விரக்தி அடைந்திருக்கிறான். அதனால், விளையாட்டில் வருவதுபோல, துப்பாக்கியால் சுட்ட பிறகு அனைவரும் திரும்பி வருவார்கள் என்று நினைத்து அவர்களை சுட்டிருக்கிறான், என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். என தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதை தொடர்ந்து, மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கு, ஆபத்து விளைவிக்கும் பப்ஜி போன்ற வீடியோ கேம்களுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்ய பாகிஸ்தான் காவல்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். எனினும், லாகூர் உயர் நீதிமன்றம் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதே போன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாகாணத்தின் போர்ட் அப்பாஸ் என்ற பகுதியில் நடந்துள்ளது. முகமது ஆதிப் என்ற சிறுவன் பப்ஜி கேம் விளையாடுவதில் தீவிரமாக இருந்துள்ளான். எனவே, அதே சிந்தனையில் இருந்த சிறுவன் அவனது பெற்றோரிடம் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளான். ஆனால், அவனது பெற்றோர் வாங்கி தர மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சிறுவயதில் இதுபோன்ற வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவது மற்றும் விளையாடுபவர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுவது, போன்றவற்றை கவனத்தில் கொண்டு பாகிஸ்தானில் 2020-ஆம் வருடம் பப்ஜி ஆன்லைன் கேம் விளையாட தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .