கேட்கவே மனசு வலிக்கிது.. 1 இல்ல 2 இல்ல.. 460 குழந்தைகள் பரிதாப பலி.. மனதை ரணமாக்கும் தகவல்..
கேட்கவே மனசு வலிக்கிது.. 1 இல்ல 2 இல்ல.. 460 குழந்தைகள் பரிதாப பலி.. மனதை ரணமாக்கும் தகவல்..
வன்முறை காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 460 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியிருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். நாட்டை கைப்பற்றும் நோக்கில் தாலிபான்கள் நடத்திய வன்முறை, போர் ஆகியவற்றால் கடந்த 6 மாதத்தில் மட்டும் இதுவரை 460 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண்குழந்தை மேலும் சில குழந்தைகள் என்று இன்று ஒரு நாள் மட்டும் ஒன்பது குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார். இப்படியாக இதுவரை 460 குழந்தைகள் பரிதாபமாக இறந்திருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் செய்தியாக இந்த தகவல் தற்போது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.