தோனி குறித்து வெளியான முக்கிய தகவல்..

TamilSpark

அடுத்த ஐபில் சீசனிலும் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தோனி சென்னை அணிக்காக ஐபில் போட்டியில் விளையாடி வருகிறார்.

சென்னை அணியின் கேப்டனாக இதுவரை 14 சீசன்களை கடந்துள்ளார் தோனி.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்தமுறை முதல் அணியாக சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபில் போட்டியில் இருந்து தோனி விரைவில் ஓய்வு பெற போவதாக செய்திகள் உலா வந்தது.

கடந்த ஆண்டும் இதேபோன்று செய்திகள் வெளிவந்தநிலையில், அதற்கு தோனி மறுப்பு தெரிவித்தார்.

இந்த ஆண்டுடன் தோனி ஐபிலில் இருந்து விலக்கபோவதாக மீண்டும் செய்திகள் வெளியானது.

தற்போது இதுகுறித்து மீண்டும் விளக்கமளித்துள்ளார் தோனி.

தனது கடைசி ஐபில் போட்டி சென்னையில் தான் நடைபெறும், அங்கு இருந்துதான் நான் ஓய்வு பெறுவேன் என கூறியுள்ளார் தோனி.

இதன்மூலம் தோனி அடுத்த வருட ஐபில் போட்டியிலும் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

அடுத்த ஆண்டும் தோனி சென்னை அணிக்காக விளையாடுவர் என்பதை சென்னை அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.