தண்ணீர் குடித்த 6 பேர் திடீர் மரணம்.. பலர் கவலைக்கிடம்..

TamilSpark

கர்நாடகாவில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஜயநகர் மாவட்டத்தில் உள்ள மகராபி கிராமத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு அங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.

அதில் இருந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீரும் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நீரைக் குடித்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஐந்து பேர் நேற்று உயிரிழந்தனர்.

சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.