கணவன் கண்விழித்தபோது கண்ட அதிர்ச்சி காட்சி!! விவரம் அறியாத வயதில் காதல்.. சிதைந்து போன திருமண வாழ்க்கை!

கணவன் கண்விழித்தபோது கண்ட அதிர்ச்சி காட்சி!! விவரம் அறியாத வயதில் காதல்.. சிதைந்து போன திருமண வாழ்க்கை!


young-women-commit-suicide-who-did-marriage-at-age-of-1

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி குடும்ப தகராறில் தற்கொலை செய்துகொள்ள முயன்றதில் மனைவி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன், உமாதேவி என்ற இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். உமாதேவிக்கு 16 வயது இருக்கும்போதே பாலகிருஷ்ணன் அவரை திருமணமும் செய்துள்ளார். இதனால் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு, சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார்.

இதனை அடுத்து உமா தேவிக்கு 18 வயது ஆனபிறகு, இருவரின் வீட்டாரும் பேசி முடித்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மதுரை ஜீவா நகர் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் தெருவில் வீடு எடுத்து அதில் வசித்துவந்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் கார்பென்டராக வேலை பார்த்துவந்த நிலையில், உமாதேவி வீட்டை கவனித்துவந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே சண்டை வந்தநிலையில், பாலகிருஷ்ணன் இரவு உறங்க சென்றுவிட்டார்.

அப்போது அவரது மனைவி உமாதேவி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். பாலகிருஷ்ணன் கண்விழித்து பார்த்தபோது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அருகில் இருந்த உளியை எடுத்து கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உமாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். காதலித்து திருமணம் செய்தநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும், கணவன் தற்கொலைக்கு முயன்றதும் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.