காதலனுடன் பேச மறுத்த காதலி! கல்லூரி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!

காதலனுடன் பேச மறுத்த காதலி! கல்லூரி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!


young man suicide for love failure

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் பகதூர். 22 வயது நிரம்பிய நேபாள நாட்டை சேர்ந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அக்கல்லூரியில் பணியில் இருந்து வந்துள்ளார். இவர் கல்லூரியின் வளாகத்திலேயே திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பகதூர் தன் சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அடிக்கடி நீண்ட நேரம்பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

suicide

இந்தநிலையில் பகதூரின் காதலி திடீரென அவருடன் பேச மறுத்ததாக தெரிகிறது. காதல் தோல்வியால் மனவேதனையடைந்த பகதூர் அவர் பணிபுரிந்த கல்லூரியின் வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.